காணி அபகரிப்பை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று புதன் (21) முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றது. குறித்த இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் காணியில் 20 ஏக்கர் காணியினை தமக்கு பெற்றுத்தர வேண்டும் எனவும், அப்பகுதியில் 153 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், தமக்கென 1/4 ஏக்கர் காணியினை பெற்றுத்தரும்படியும், தற்பொழுது எந்தவித முன்னறிவித்தலுமின்றி இரவோடு இரவாக இரசாயனக் கூட்டுத்தாபனத்தினர் வேலி அமைத்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

துயர் பகிர்வோம்

குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

காணி அபகரிப்பை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)