
posted 6th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அபகரிக்கப்படும் காணிகள் - ஆதரவற்ற பண்ணையாளர்கள் - மீட்டெடுக்கப் போராட்டம்
இன்றைய தினம் மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக பண்ணையாளர்கள் சார்பாக பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தலைமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் எம் மக்களுக்கான போராட்டம் பல வழிகளில் தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கூறினார்.
இதன் போது ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பிள்ளையான் என்பவரும் ஆளும் கட்சியினரோடு இணைந்து இப் போராட்டத்துக்கான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என பாராளுமனற உறுப்பினர் சாணக்கியன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)