
posted 4th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
செல்வச் சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள்
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நடத்தப்பட்டுவரும் வாராந்தர நிகழ்வில் 04 மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
கிளிநொச்சி - பொன்நகர் மத்தி கிராமத்தை வசிப்பிடமாகவுள்ள திரு. இ. செபஸ்ரியான் பீற்றர், கயேந்திரன் நாகராணி, திரு.கந்தசாமி உதயகுமார் ஆகிய மாணவர்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டம் - உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டை சேர்ந்த அழகு சர்மிளா என்பவர்க்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன் இம் மாணவர்களுக்குரிய போக்குவரவுச் செலவுகளும் வழங்கப்பட்டன.
இச் செயற்றிட்ட உதவிகளை கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் வழங்கி வைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)