
posted 11th January 2022
யாழ்ப்பாணம் வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாளை செவ்வாய்க்கிழமை வடமராட்சிக்கு வருகை தரவுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தெரிவித்தார்.
நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வருகை தரும் எதிர்க்கட்சி தலைவர் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை வழங்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முற்பகல் 11மணியளவில் உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளரின் வீராணன் தோட்டம், கரணவாய் தெற்கு, கரவெட்டியில் உள்ள இல்லத்தில் கிராம மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் விவசாயிகள் மற்றும் வீட்டுத் திட்டம் தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் எழுத்து மூலமாக அறிவிக்க முடியும்.
அத்துடன், உதவி தேவைப்படும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்களையும், சிறுவர்களுக்கு பால்மா பைக்கெற்றுக்களையும் வழங்கி வைக்கவுள்ளார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House