
posted 31st January 2022
யாழ் மாவட்டத்தின் வேலணை பிரதேசத்தில் திருவள்ளுவர் வீதியில் சில மாதங்களாக ஏற்பட்ட குடிநீர் கசிவு சீர் செய்யப்பட்டு 25க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
வேலணை-திருவள்ளுவர் வீதியில் குடிநீர் விநியோக குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கு சில மாத காலமாக தடை ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் 28/01 வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஆராயப்பட்டிருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் நடவடிக்கை காரணமாக உடனடியாக குறித்த பிரச்சனை சீர் செய்யப்பட்டு 29/01 சனிக்கிழமை திருவள்ளுவர் வீதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும் வகையில் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B