
posted 12th January 2022
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (14) ஆயிரமாவது நாள் நிறைவுறுகின்றது. அன்றைய நாளில் அனைத்து கத்தோலிக்க ஆயர்களும், குருமார்களும், பொது மக்களும் கூட்டுப் பிரார்த்தனையில் ஒன்றுகூடுங்கள் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேட்டுள்ளார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு;
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் கடவுளுக்கு முன்பாக அனைத்து கத்தோலிக்க ஆயர்களும், குருமார்களும், அருட்சகோதரிகளும் மற்றும் அனைத்து மக்களும் தெவத்தே பேராலயத்தில் பிரார்த்தனை ஆராதனைக்காக ஒன்று ஒன்று கூடுவோம் என்று பேராயர் விக்கிரமசிங்க கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படைத்தன்மையையும், நீதியையும் எதிர்பார்க்கின்றார்கள். நாட்டிலுள்ள கத்தோலிக்க திருச்சபை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், அத்துடன் இந்தத் தாக்குதல்களுக்கு அரசியல் அனுசரனை உள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது - என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House