திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபை தலைவராக ஓய்வுநிலை எந்திரி இராமகிருஷ்ணன் தெரிவு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபை தலைவராக ஓய்வுநிலை எந்திரி இராமகிருஷ்ணன் தெரிவு

மன்னார் பாடல்தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பரிபாலன சபையின் நடப்பு வருட நிருவாகத் தெரிவில் ஓய்வுநிலை எந்திரி எஸ்.எஸ். இராமகிருஷ்ணன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பரிபாலன சபையின் நடப்பு வருட நிருவாகத் தெரிவு இடம்பெற்றபோது தலைவராக திரு.எஸ். எஸ். இராமகிருஷ்ணன் (ஓய்வுநிலை எந்திரி), பிரதி தலைவர் திருமதி கைலாசப்பிள்ளை, இணைச் செயலாளர்கள் எஸ்.யு. சந்திரகுமாரன் (மேலதிகப் பணிப்பாளர் நாயகம் பொதுத் திறைசேரி நிதி அமைச்சு), எஸ். பிரிந்தாவனன்நாதன் (முன்னாள் மன்னார் நகர சபை உறுப்பினர்), பொருளாளர்கள், ஏ.ஐ. தயானந்தராஜா (ஓய்வுநிலை அதிபர்), கி. சுரேஸ்குமார் (மன்னார் மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்), கே. ஞானேந்திரன் (பட்டயக் கணக்காளர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபை தலைவராக ஓய்வுநிலை எந்திரி இராமகிருஷ்ணன் தெரிவு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)