
posted 1st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கிளிநொச்சியில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக கிளிநொச்சியில் சனி (29) ஊடகவியலாளர்கள் சிவில் அமைப்புக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புகள், சிவில் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது,
- “ஊடகங்களை அடக்கவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்”
- “பாராளுமன்ற உறுப்பினர்களே ஜனநாயத்திற்கு எதிராக சட்டத்தை ஆதரிக்காதீர்கள்”
- “ஜனநாயகத்தை பாதுகாக்கவே சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - ஒடுக்குவதற்கு அல்ல”
- “புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கருத்து சுதந்திரத்துக்கு சாவுமணி”
> “மக்களாட்சியின் மாண்புக்கு மதிப்பளி, ஜனநாயகத்தை பலப்படுத்து”
என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)