
posted 27th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் (Vedukunarimalai Adilingeswarar Temple) மீண்டும் ஆரம்பமான பூசை வழிபாடுகள்
வவுனியாவின் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் (Vedukunarimalai Adilingeswarar Temple) நீண்ட நாட்களுக்குப் பின்னர் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகின.
வவுனியா வடக்கு ஒலுமடு வரலாற்று பெருமை கொண்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயப் பகுதியை உரிமை கோரிய தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் என்பவற்றின் செயல்பாடுகளால் பூசை வழிபாடுகள் தடைப்பட்டன. இதன் பின்னர், அங்கிருந்த விக்கிரகங்கள் உடைக்கப்பட்டன.
இவ்வாறான நிலைகளினால் நடைபெற்று வந்த ஆலய பூசை வழிபாடுகளெல்லாம் ஸ்தம்பித்து பின்பு முற்றாகத் தடைப்பட்டிருக்கையிலே வவுனியா மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த இக்கோவில் சம்பந்தமான வழக்கானது கடந்த திங்கள் (24) அன்று ஒரு முடிவிற்கு வந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்புப் பிரகாரம், ஆலயத்தின் பூசை, வழிபாடுகளை அதிகாரிகள் எவரும் தடுக்க முடியாதுஎன்பதாகும். இதையடுத்து அங்கு பூசை வழிபாடு மீள ஆரம்பித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)