
posted 13th April 2022
பிறக்கின்ற சுபகிருது வருடம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுபம் கொடுக்கும் நல் ஆண்டாக அமைய வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்-சிங்கள புதுவருட தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;
நாட்டு மக்களுக்கு தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்.
நாடும், நாட்டு மக்களும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்திருக்கும் இக்கட்டான தருணத்தில் இப் புதுவருடம் பிறந்துள்ளது.
பிறந்துள்ள சுபகிருது வருடம் சவால்களை வெற்றிகொண்டு, நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மீண்டெழுந்தது போல் நிச்சயமாக தற்போது நிலைகொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருந்தும் நாடும், நாட்டு மக்களும் விடுபடுவோம். அந்த வளமான நாளின் தொடக்க நாளாக இந் நாள் அமைய வாழ்த்துகிறேன் என மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

எஸ் தில்லைநாதன்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY