
posted 23rd April 2022
ஏப்பிரல் 21 அன்று படுகொலை செய்யப்பட்டவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலை இன்றையத் தினம் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் நடைபெற்றது.
இவ்வாறான சம்பவம் எதிர்காலத்தில் இனிமேல் நடைபெறக்கூடாது எனவும் அவ்வாறான சம்பங்களுக்கான குற்றவாளிகள் இன்னும் சரியான முறையில் இனம் காணப்படாது இருக்கின்றனர்.
இவர்களை விரைவில் இனம் கண்டு இவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கைவிட்டு வருகின்றனர்.
மனித நேயத்துடன் ஒரு சரியான கட்டமைப்புக் கொண்டு ஒவ்வொருவரும் வாழும் நிலையை உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால் இவ்வாறான சம்பவங்களால் மனித ஒற்றுமையை சிதறடித்து இணைந்து வாழ்தல், சேர்ந்து வாழ்தல் என்பதனை பலதரப்பட்ட குழப்பங்களால் சிதறுறும் சூழ்நிலை ஏற்படுகின்றது என மன்னாரில் நடைபெற்ற ஏப்பிரல் 21 அன்று படுகொலை செய்யப்பட்டவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலின்போது தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வி.எஸ். சிவகரன் இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY