
posted 28th January 2022
13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்திய அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சவப்பெட்டியுடன் சுமார் 25 பேருடன் முன்னெடுத்த பேரணி 28.01.2022 மதியம் யாழ்ப்பாணம் நகரத்தை வந்தடைந்தது.
கிளிநொச்சியிலிருந்து நேற்றுக் காலை இந்தப் போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. அங்கிருந்து நகர்ந்த பேரணி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சி நடப்பதாகவும் அதனை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களினதும் பூரணமான ஆதரவை கோரும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தவாறு நகர்ந்தது.
இந்தப் பேரணியில் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணிகளான ந.காண்டீபன், க.சுகாஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என சிலர் இந்தப் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House