posted 18th May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- தன்னை நம்பாமல் கணேஷனின் சொல்லைக் கேட்டு இருபது வருடங்களாக தன் குடும்பத்தினை ஒதுக்கிய தாயிடம் நியாயம் கேட்கத் துணிந்த மகள்.
- தனக்கு எழுதிக் கொடுத்த அசையாச் சொத்தே அதற்கு துருப்பாக முடிவினைத் துரிதப்படுத்துகின்றது
- கண்மூடித் தனமாக நம்பப்படுபவர்கள் துரோகிகள் என்பதனை உணராமல் வாழ்க்கையினை ஓட்டும் ஜனாம்மா
- தமிழ்தான் உண்மையான வாரிசு என்பதனை அழித்து விடத் துடிக்கும் கணேஷன்
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 16.05.2026
ஜெயறாணியை மீண்டும் வீட்டிற்கு அழைத்த ஜனாம்மா, காணியைத் தரும் படி கேட்டும் தரமாட்டேன் என்று கூறியதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. தமிழ் எவ்வளவோ கெஞ்சியும் ஜெயா அவவுடைய பிடிவாதத்திலிருந்து இறங்குவதாக இல்லை. ஏன்னென்று ஒருவருக்கும் புரியவுமில்லை.
கடன்காறி ஒருபக்கம் கணேஷனால் உசுப்பேறி ஜெயாவை வெருட்டுக் கொண்டிருக்கின்றாள். ஆனால், இதெல்லாம் ஒரு நல்ல விதத்தில் அமையும் என்றுதான் தோன்றுகின்றது. ஆதாவது, இந்தப் பிரச்சினையானது சரளாவின் தலையில் விடியப் போகின்றது.
எப்படியென்றால், சரளா அம்முவை வெருட்டுவதனால்தான் அம்மு அந்தக் காணியை ஜனாம்மா கேட்டும் இவ்வளவு பிடிவாதத்துடன் கொடுக்காமல் இருக்கின்றா என்பதுதான். இதனால், சரளாவிற்கு றொம்ப இழப்புகளைச் சந்திக்க வேண்டியும் வரலாம்.
ஆனால், ஜெயாவின் நிலைமையானது மிகவும் ஒரு இறுக்கமான பிடியாக வைத்துள்ளா. ஆதாவது, இந்தப் பிடிவாதமானது மந்திரியின் காதுக்கும் எட்டுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதனால், மந்திரி தனக்கு விஷயம் சரி வர வேண்டுமென்றால், மந்திரியும் ஜெயாவின் பக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலையானது உருவாகும்.
அதற்கு மந்திரி, வீணாக பழி முடிக்கப்பட்டுள்ள பிரகாஷ் மேலான கொலை முயற்சியானது இப்போது மந்திரியின் நேரான பார்வைக்கு வரவுள்ளது. இதனால், இந்த கொலை முயற்சியுடன் சம்பந்தமான கணேஷனும், குறிஞ்சியும் பிடி படுவார்கள். அத்துடன், காணாமல் போன தமிழின் அப்பாவும் மீட்கப் படுவதற்கான ஒழுங்குகளை மந்திரியின் மேற்பார்வையின் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக வருவதற்கு ஜெயாவின் இந்து அழுங்குப் பிடியானது உதவப் போகின்றது.
இதனால், ஜனாம்மாவிற்கும் மரியாதைக் குறைவாக இருக்கப் போகின்றது. இவ்வளவு காலமாக ஜனாம்மா தனது சொந்த மகளையே ஒதுக்கி வைத்துள்ளார் என்றும், இவ என்னென்று மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கலாம் என்ற கேள்விக் கணைகளுக்கு ஜனாம்மா பதிலளி்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழ்நிலையானது உருவாகப் போகின்றது.
கணேஷனை உள்ளே தள்ள தமிழிடம் எல்லா ஆதாரங்களும் இருப்பதினால் கணேஷனால் எந்த விதத்திலும் தப்ப முடியாத சூழ்நிலையானது உருவாகலாம்.
இதற்கெல்லாம் மந்திரி தன் கண் முன்னாலேயே எல்லார் முன்நிலையிலே வாக்குமூலம் கொடுத்தாலொழிய தான் கையெழுத்துப் போட முடியாது என்று ஒரு நிலையினை ஜெயா உருவாக்குவா. இதுதான் இனி நடக்கும்.
வெண்பாவும், அமுதாவும் எவ்வளவோ முயற்சிகள் ஜெயாவின் குடும்பத்திற்குச் செய்திருந்தாலும் அதெற்கெல்லாம் தமிழின் காலைப் பிடித்துக் கெஞ்சாத குறையாகக் கெஞ்சுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
இதற்கிடையில் வர்ஷினியின் கல்யாணப் பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கின்றது. முதல் முறை ஜெயறானி வந்த போது வர்ஷினியை வாழ்த்தினாவே. அதுமட்டுமல்லாமல், அங்குள்ள ஒவ்வொருவரையும் தனது தாயின் முன்னாலே சுகம் விசாரித்தாவே ஜெயறாணி. இதனைப் பார்க்கையிலே ஜேயா ஒரு முடிவுடனேதான் இப்போது இருக்கின்றா என்றுதான் தோன்றுகின்றது. அதாவது, எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டா என்றுதான் தெரிகின்றது.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!