posted 2nd February 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 30ஆம், 31ஆம் ஜனவரி தொடக்கம் 02ஆம் பெப் திகதிகளின் Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீயின் அதிர்ச்சிச் செய்தியினால் ஜனாம்மா அறிவு மயங்கி வீழ்ந்து வி்ட்டா. அனைவரும் பயந்து துடித்தார்கள், ஆனால், கணேஷனின் குடும்பத்தினைத் தவிர.
- சிபீயாலும் இதனைத் தாங்க முடியவில்லை. தமிழால் வெகுவாகத் தாங்க முடியாமல் பிள்ளையாரப்பாவிடம் தன்னையே பலி கொடுக்கத் துணிந்தாள். இதனால், அன்புள்ளங்கள் தானாக இணைத்தன.
- ஜனாம்மா தான் ஆடிய நாடகத்தினை கேடீயிடமும், சேதுவிடமும் சொல்லி எப்படியாவது தமிழையும், சிபீயையும் சேர்த்துவிடும்படி தாழ்மையாகக் கேட்ட ஜனாம்மா.
- இடமாற்றத்திற்கு டாக்டரின் புத்திமதியினால் குடும்பம் பூராவும் கொடைக்கானல் சென்றார்கள். இதற்குள், பிறேமும் சேர்ந்தான். தமிழும், தேனுவும் கதைத்ததினை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த வெண்பா தமிழிடமும், தேனுவிடமும் சிக்கினாள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 30 - 02.02.2026
சிபீயையும், தமிழையும் ஒன்று சேரக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் கணேஷனின் குடும்பத்துடன் சேர்ந்து சம்யூத்தாவும், பிறேமும் கொடைக்கானல் வரை இழுபட்டுப் போய் வந்துள்ளார்கள்.
ஆனால், சிபீயோ தமிழுடன் ஒரு ஒப்பந்தத்தினை வைத்துள்ளான், அதாவது, நாங்கள் இருவரும், உண்மையான கணவன் மனைவி போன்று, ஒருவர் ஒருவருடன் மிகவும் இன்னியோன்யமாக இருப்பது போன்று, ஜனாம்மாவின் முன்னாலும், மற்றவர்களின் முன்னாலும் நடிப்போம் என்பதுதான். இந்த சிபீயின் கேவலமான திட்டத்திற்கு ஜனாம்மாவின் நலனுக்காக ஏற்றுக் கொண்டாள் தமிழ். இதனால் தமிழுக்கு எவ்வளவு வேதனை அவள் மனதினில் ஏற்கபட்டிருக்கும் என்று ஒரு கணமும் சிந்திக்காத சிபீ.
சிபீ தன்னை காதலிப்பதாக ஏமாற்றியது காணாததென்று இப்போது ஜனாம்மாவை ஏமாற்றுகின்றான். அதுவும், தமிழையும் கூட்டுச் சேர்க்கின்றான். இதெல்லாம் தமிழிடம் கேட்பதானது ஒரு கேவலமான செய்கையாகும் என்று சிபீ எப்போதுதான் விளங்கப் போகின்றானோ தெரியாது. ஆனால், சிபீ போட்ட route மாதிரித் தெரியவில்லை. இது, மாறாக, தெய்வம் போடுகிற route என்றுதான் நினைக்கவும் தோன்றுகின்றது.
ஜனாம்மாவின் சுகவீனம் இத்துடன் முடிந்து விடக் கூடாது, அவ இறந்து விட்டாலும் பரவாயில்லை என்பது அமுதாவின் அபிப்பராயம். ஆனால், கணேஷனோ மிகவும் ஆழமாகச் சிந்தித்தான். அதாவது, ஜனாம்மா இப்ப இறக்கக் கூடாது. ஏனென்றால், சொத்துகள் எல்லாம் தமிழின் பெயருக்கு மாறி இருக்கின்றதோ என்ற சந்தேகம் அவனுக்கு இருப்பதனால். இந்த confirmation க்கு மட்டும்தான் கணேஷன் waiting.
சிபீ கொடைக்கானல் அடைந்ததும், தமிழுடன் மிகவும் அன்புடன் நடப்பது போன்று நடித்தான். இதனை ஜனாம்மாவும், மற்றவர்களும் நம்பினார்கள். ஆனால், கேடீயும், சேதுவும் நம்பவில்லை. ஜனாம்மாவுடன் சேர்ந்து மீனாவும், வர்ஷினியும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கணேஷனின் குடும்பமும், சம்யூத்தாவும், பிறேமும் உள்ளாலேயே எரிந்தனர்.
இத்துடன் ஜனாம்மா இரண்டாம் தரம் மயங்கி விழுந்தது போல நடித்தா. இதனால், சிபீயை ஒரு வழிக்குக் கொண்டு வரலாம் என்று. ஆனால், இது எவ்வளவு காலத்திற்கு ஓடும் என்றுதான் தெரியவில்லை. ஆனால் ஒன்று, விளையாட்டும் வினையாகலாம். அந்த சமயம், ஜனாம்மாவின் இந்த நடிப்பு தெரிந்தவர்கள் இதனைக் கவலையீனமாகக் கூட விட்டு விட ஒரு நாளைக்குச் சந்தர்ப்பம் அமையலாம். அப்போது விளைவானது பயங்கரமாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.
கொடைக்கானலுக்கு பிரகாஷும் சென்றுள்ளார். ஆனால், இவர் சுகமாகி விட்டார் என்று தமிழுக்கும், தேனுவுக்கும் மட்டும்தான் தெரியும். இங்கு, கொடைக்கானலில் இருக்கும் போது கணேஷனின் குள்ளத்தனமும், வெண்பாவின் நரிக் குணமும் வெட்டைக்கு வரலாம். அதுமட்டுமல்லாமல், தமிழும், தேனுவும் அறையினுள்ளே கதைத்துக் கொண்டிருக்கையிலே வெண்பா அதனை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததை தமிழும், தேனுவும் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், அதனை வெண்பாவிற்கு தமிழ் காட்டிக் கொள்ளவில்லை.
ஒரே அறையினுள், ஒரே கட்டிலினில் தமிழும், சிபீயும் தூங்க வேண்டிய கட்டாயம். ஆனால், அது நடைமுறைக்கு ஒத்துவராததொன்றாகுமே. எனவே, இருவருக்கும் வழமைபோல சண்டை தொடங்கிற்று. ஆனால், இந்த சண்டையானது கூடலாக மாறிடுமோ என்று ஒரு பக்கம் சிந்திக்கவும் தோன்றுகின்றது.
இப்போது இது புதிய இடம், புதிய அறை, புதிய சூழல், ஆனால், சிபி இப்ப மட்டும் தமிழை left to right வாங்கிக் கொண்டிருக்கின்றான்தானே. இது ஒத்து வருமா? வாழ்க்கை ஒன்றாகுமா? ஜனாம்மாவின் விருப்பத்திற்கு ஒத்துப் போகுமா? இவர்களையும் அறியாமல் தமிழினதும், சிபீயினதும் வாழ்க்கை ஆரம்பமாகி விடுமா?
இப்படிப் பல கேள்விகளுடன் இந்தக் கதையானது தொக்கு நிற்கின்றது. உங்களுக்கு ஒரு கேள்வியும் மனதினில் உதிக்கவில்லையா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!