Varisu - வாரிசு - 29.12 - 05.01.2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இன்றைய Serial Review & Analysisஆனது December 29ஆம் திகதியிலிருந்து 5ஆம் திகதி, இன்று வரை அடங்கலாகவுள்ள Serial Review & Analysis களை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

Community Centre திறப்பதற்காக பாண்டிபுரத்தினை நோக்கிச் சென்றனர் ஜனாம்மாவின் குழு. அங்கு சமூக விடுதலை தெருக்கூத்தினை 50 வருடங்களிற்கு முன்பு நடத்திவந்தனர் றாஜனும் அவனது குளுவும். அங்கு பண்ணையாராக இருந்தவர், மிகவும் பிரபல்யமானவர், மக்களால் விரும்பப்படாதவர், ஊராரின் சொத்துக்களை அநியாயமாகக் கொள்ளை அடித்து சொத்து சேர்த்து செல்வாக்கினை மக்களின் வயிற்றெரிச்சலினால் உருவாக்கியவர், கனகவள்ளியினதும், கைலாசத்தின் அப்பா, அம்பலவாணர் என்பவராவார்.

தெருக்கூத்தானது, ஒவ்வொரு கிராமமாக இவர்கள் சென்று அங்கு நிலவும் உள்ளூராரின் பிரச்சனைகளை வெளிக் கொணர்ந்து, அப்பாவி மக்களை விளிப்பிற்குள்ளாக்குவதனை கருப்பொருளாகக் கொண்ட றாஜனினதும் அவன் குளாமினதும் கூத்தாகும்.

வாரிசு - Varisu - 29.12 - 05.01.2026

இக்கூத்தினை இரசித்துப் பார்த்துவந்தவ ஊராரில் ஒருவள்தான் கனகவள்ளி. உண்மையினை கவிதையாக, நாட்டியமாக உரக்கச்சொல்லி வந்த றாஜனின் மேலே கனகவள்ளிக்கு மையல் வியாபித்தது.

கூத்தாட்டிக்கும், தனது மகளுக்கும் உள்ள காதலினை எதிர்த்து நின்றான் அம்பலவாணர். கௌரவம்தான் தனக்கு முக்கியம் என்ற தாரக மந்திரத்தினை ஓதியவனாய், தன் மகளையும், றாஜனையும் கொண்று தனது வீறாப்பினை பரம்பரைக்கே சுவற வைத்தான். இதில் பங்கேற்றவனாய் அம்பலவாணரின் மகன் கைலாசமும் சேர்ந்து கொண்டான்.

சித்தரைக் கண்ட சிபீயும், தமிழும், ஜனாம்மாவும், அவர் காட்டிய நினைவகத்தினையும், ஊரார் விளக்கிய 5 சகாப்தத்தின் முன்னான உண்மைச் சரித்திரத்தினையும் கண்டு வியந்தனர். ஏனென்றால், சிபீ, றாஜனை ஒத்துள்ளதாகவும், கனகவள்ளி, தமிழரசியை ஒத்ததாகவும், றாஜனின் ஆச்சியானவ, ஜனாம்மாவை ஒத்ததாகவும் இருந்ததினால்தான். இவர்கள், அவர்களின் clonesகளாக இருந்தது அனைவருக்கும் வியப்பாக இருக்கின்றதோ இல்லையோ ஜனாம்மாவின் குடும்பத்திற்கு வியப்பாக இருந்தது.

சித்தர், தமிழைச் சந்தித்த அந்த மரத்தடிதான் அன்று கனகவள்ளி, றாஜனைச் சந்தித்து தனது தகப்பன் எங்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க விரும்புகின்றார் என்றும், தன்னை பெண் கேட்டு வரும்படியும் அழைக்கின்றார் என்றும் கனகவள்ளி றாஜனை வேண்டிக் கொண்ட இடமாகும், அந்த மரத்தடியாகும்.

நம்பிக்கை இல்லாத றாஜன், வள்ளியின் சொல்லை நம்பினான். அப்பாவின் சொல்லை நம்பிய வள்ளி தகப்பன் ஊட்டிய விஷம் கலந்த உணவினை உண்டாள், மயக்கமானாள். வள்ளியைக் காப்பாற்ற வந்த ஆச்சியும், றாஜனும் அடிக்கப்பட்டும், கத்தியால் குற்றப்பட்டும் கொலை செய்யப்பட்டார்கள். மூவரின் ஆவிகளும் அடங்கின, அம்பலவாணரின் வீட்டினிலே. அவர்கள் மூவரின் உடல்களும் அம்பலவாணரின் தோட்டத்திலே புதைக்கப்பட்டு உரமாக்கப்பட்டது.

சித்தரின் நோக்கோ தமிழ் சிபீயை மணம் முடித்துவிட்டாள் என்பதுதான். அதாவது, வள்ளி, றாஜனை மணமுடிக்காமல் கொலை செய்யப்பட்டாள். ஆனால், நிறைவேறாத அவர்களின் ஆசையானது நிராசையானது 5 சகாப்தங்களின் முன்னே. இன்று அந்த ஆசையானது நிறைவேறியது. வள்ளி, நீ மீண்டும் பிறந்தனையோ என்று ஏக்கத்திலும், வேணவாவிலும் சித்தர் கேட்டார். ஏன் வள்ளி உனது தீர்க்க வேண்டிய பாக்கியினை தீர்க்க வந்தனையோ என்று வினவினார், தமிழிடம்.

இங்கு ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கையினை அலசிப்பார்ப்பதற்கான நேரமாகும். அலசுங்கள். நானும் அலசுகின்றேன். விடை கொஞ்சம் எனக்குத் தென்படுகின்றது. ஆனால், உங்களுக்கு?
வெண்பா தனது திட்டங்களை, அதாவது, முதன்முதலில் சம்யூத்தாவை வெளியேற்றுவதற்கானவை ஆகும். இதில், அடுத்தபடியாக, தேனை இரையாக்குகின்றாள். அவளை ஒரு தொகைப் பணத்தினை தனது தாய் அமுதாவை வைத்து கொடுக்க வைத்து, அந்தப் பணத்தினை தனது அடியாட்களை வைத்து திருடும்படி சொல்லி, தமிழையும், தேனையும் எல்லார் முன்னிலையிலும் வைத்து கேட்கக் கூடாத கேள்விகளெலெல்லாம் அமுதாவையும், கணேஷனையும் வைத்து கேட்டு அவமதிக்கவும் வைத்து ஆட்டத்தினைத் தொடங்கினாள். ஒரு மனிதனால் காது கொடுத்துக் கேட்க முடியாத சொற்களவை.
இதற்குள் சிபீ உள் நுழைந்தான். ஆனாலும், கணேஷனின் குடும்பத்தின் திட்டமோ தழிழை ஒரேயடியாக ஜனாம்மாவின் வீ்ட்டை விட்டு கலைப்பதுதானே! அதைத்தானே செய்கின்றார்கள்.

தமிழோ, தேனைக் கூட்டிக் கொண்டு இந்த நரக வாழ்க்கையானது வேண்டாம் என்று வெளியேறினாள். இவர்கள் பணக்காரர்கள், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாகவும், சந்தோஷமாகவும், ஒரே கூட்டுக் குடும்பமாகவும் வாழ வைப்பதற்கும், சொத்தனைத்தையும் பாதுகாக்கவும், தமிழின் குடும்பமாக இங்கிருந்து, இவர்களது மானத்தினை இழந்து வாழ வேண்டிய அவசியம்தான் என்ன? இதில், ஜனாம்மா ஒரு சுயநலவாதியாகத் தெரிகின்றது.

அடக்க முடியாத சிபீயைத் தமிழால் மட்டும்தான் அடக்கி ஒரு நல்ல மனிதனாக வாழ வைக்கவும், இந்த சொத்து அனைத்தையும் காப்பாற்ற முடியும் என்றும் ஒரு சுயநலமாக ஜனாம்மா சிந்தித்தாவோ எனவும் தோன்றுகின்றது. இதற்கு ஜனாம்மா, இப்போது சொன்னது போன்று அவ இங்கு இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையானது இவ்வளவிற்குப் போயிருக்க விட்டிருக்க மாட்டா. அதுவும் உண்மைதான்.
எல்லாரையும் அனுப்பி விட்டு, ஜனாம்மா தமிழுடன் தனிமையில் கதைக்க முயலும் போதுதான், பிரகாஷின் அறையினுள் இருந்து சத்தம் வந்ததினைக் கண்டு ஓடோடிச் சென்றாள் தமிழ். அவளுக்காக அதிர்ச்சியினைத் தரும் முகமாக பிரகாஷ் எழுந்து கட்டிலில் உட்கார்ந்து இருந்ததினைக் கண்டாள் தமிழ்.

தன்னை அறிமுகப் படுத்தியவளாய் பிரகாஷ் மாமனாரின் பக்கமிருந்து விளாவரையாக எல்லாவற்றையும் விளக்கினாள் தமிழ். இருவரினதும் சம்பாஷனையானது ஜனாம்மாவின் வருகையினால் இடை நிறுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் தொடர்ந்தது. 20 வருடங்களின் பின்பு மயக்க நிலையில் வைக்கப்பட்ட பிரகாஷ் கண்விழித்தார். தமிழிடமிருந்து இன்றுவரையான நிலைமையினை அறிந்து கொண்டார். தமிழின் வேண்டு கோளிற்கிணங்க அவர் மயக்கமாக இன்னமும் இருப்பதாக நடிக்க ஒத்துக் கொண்டார்.

பலவிதமான, மறைந்துள்ள, மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை கண்டுபிடிப்பதற்காக தனது மருமகள் தமிழுடன் சேர்ந்து பிரகாஷ் ஒத்துளைத்துமல்லாமல், மயக்கமான நிலையினையினையும் ஏற்றுக் கொண்டார்.

அம்முவைக் காண ஆசையாக இருப்பதாக கூறிய பிரகாஷிற்கு இப்போ அம்மு சமைத்த உணவினைப் பரிமாறினாள் தமிழ். இரண்டு சகாப்தங்களின் பின்பு பிரகாஷின் இரைப்பையினுள் உணவு இறங்கியது. பூரித்துப் போனார், புரிதலை உருவாக்கினாள் தமிழ். மீண்டும் உறக்க நிலைக்கு போகச் சம்மதித்தார் பிரகாஷ். இது நல்ல யுக்தியென ஒத்தும் கொண்டார்.

கணவன், மனைவி என்று உறவினை மீண்டும் மீண்டும் சிபீக்கு விளங்கப்படுத்தினாள் தமிழ். பாண்டிபுரத்துக் கோவிலில் வைத்து அதாவது, சித்தரைக் கண்ட கோவிலில் வைத்தும் விளங்கப்படுத்தினாள். தெய்வத்தின் செயலாக, றாஜனினதும், வள்ளியினதும் இருவருமாக நின்றெடுத்த போட்டோவினை ஊர்ப் பெரியவரில் ஒருவர் கோவில் மூலஸ்தானத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார்.

அத்துடன், தெய்வச் செயலோ என்னவோ றாஜன் அவன் கைப்பட வள்ளிக்கு எழுதிய காதல் கடிதத்தினை காற்றானது சுமந்து வந்தது – அதுவும் தமிழுக்குக் கிடைத்தது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வள்ளி நீதான் எனது மனைவி என்று றாஜன் கூறியது, தமிழ் சிபீக்கு மனைவி ஆனாலும், சிபீயோ தமிழை ஒரு துரோகியாகவே பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

கணேஷனினதும், அமுதாவினதும் வார்த்தைகள் வலித்ததோ என்னவோ சிபீயின் உதாசீனம் தமிழை வதைத்திருக்கும். அந்த நேரம், வார்த்தைகளையும் தமிழ் இரைமீட்டிருப்பாள், அதுமட்டுமா, சிபீ உன்னை வதைத்துக் கொண்டிருப்பேன் என்பதனையும் நினைத்திருப்பாள். பெண்ணானவள் கெஞ்சுவாளாம், இவர் மிஞ்சுவாராம்.

இது ஒரு வாழ்க்கையா என்று தமிழ் நினைத்திருக்க மாட்டாளா? தமிழ் சமைத்த bread omelette தனது பசியாற்றுவதற்கு சிபீக்கு வேண்டும், ஆனால், தமிழ்தான் தேவையில்லை. இதிலென்ன நியாயம் இருக்கு?

சிபீ, தமிழை ஏமாற்றியதை விடவா தமிழ் சிபீயை ஏமாற்றியது?

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)