posted 22nd May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- அத்தைக்கு மகிமை கிடைக்க வேண்டும் என்பது நல்ல, உயரிய குணம்தான், ஆனால், இந்த உலகத்திலே!
- விளக்கும் எரியணும், வீசும் காற்றும் இருக்கத்தான் வேண்டும் என்றால்!
- தமிழின் மனத்தினைப் பாரத்து நெகிழ்ந்தான் சிபீ
- அம்மா மீனாவின் அழுக்கு நிறைந்த மனதினைப் பார்த்து கண்ணீர் விட்டழுதான் சிபீ.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு -- 21.05.2026
மாமியாருக்கும், மருமகளுக்குமான போட்டி இது. இந்த சாம்ராஜ்யத்தினை ஜனாம்மாவின் பின்பு யார் என்பதுதான் இப்போதைய சவாலாக இருக்கின்றது.
மாமியாருக்கு மதிப்பு இருக்க வேண்டும், எல்லோரும் அவவுக்கு ஒரு கௌரவத்தினைக் கொடுக்க வேண்டும் என்று தமிழின் விருப்பம். ஆனால், ஜனாம்மாவிற்கோ தமிழ்தான் அதற்குரியவள் என்று கூறினாலும், தமிழ் அதை எதிர்த்து நிற்கின்றாள்.
தமிழுக்கு ஒரு சந்தர்பத்தினை போட்டி மூலமாக வழங்குகின்றா ஜனாம்மா. இந்தப் போட்டியிலே மீனாவைத் தோற்கடித்து, தமிழ் வென்றிடுவா என்பது ஜனாம்மாவின் எதிர்பார்ப்பும் விருப்பமும் கூட.
ஆனால், தமிழ் ஜனாம்மாவின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமல், தான் போட்டி என்றால் போட்டிதான் என்று எல்லார் முன்னிலையிலும் கூறிவிட்டு, தனக்கான பொறுப்பினை தட்டிக் கழிப்பதற்காக, ஜனாம்மாவை ஏமாற்றியதுமல்லாமல், ஜனாம்மா தமிழின் மேலே வைத்த நம்பிக்கையினை அழித்து விடுகின்றாள்.
அதாவது, தன்னுடன் மாமியார் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மாமியாரை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று தனக்கான தலைவிதியைத் தானே எழுதிக் கொள்கின்றாள் தமிழ்.
இதனால், வரப்போகும் மாமியாரின் ஆட்டத்தினை, அமுதாவாலும், கணேஷனாலும் மகிடிக்கு ஆடும் பாம்பு போல ஆடப்போகும் மீனாவின் ஆட்டத்தினை இனிப் பார்க்கத்தானே போகின்றோம். எங்களை விடுங்கள், தமிழ் படப்போகும் பாடுகளைப் பார்க்கத்தானே போகின்றோம்.
கிராமத்து வீட்டினிலே எல்லோரும் நிலாச் சோறுக்காக சுற்றி இருந்து கொண்டிருக்கையிலே, கணேஷன் எல்லாவற்றினையும் மறந்து தமிழை இந்தச் சந்தர்ப்பத்தினிலே ஜனாம்மாவிற்கும், மற்றவர்களுக்கும் போட்டுக் கொடுக்கத் தொடங்கினான். அதாவது, தமிழ் யாரென்பதனையும், அவள்தான் உண்மையான இந்தக் குடும்பத்தின் வாரிசு என்பதனையும் காட்டிக் கொடுப்பதற்காக கங்கணம் கட்டி காயினை நகர்த்தினான்.
ஆனால், வெகுவான குதூகலத்தில் ஆடிக் கொண்டிருந்த கணேஷன் சொல்வதெல்லாவற்றையும் பொறுத்துப் பார்த்த தமிழ் ஆலந்தூர் பெயரை வைத்து கணேஷனின் வாயை அடக்கியதுமல்லாமல், அவனின் ஆணி வேரையே அறுத்து விட்டா. Business அலுவலாக என்று கணேஷன் எல்லார் முன்னிலையிலும் கூறியதுமல்லாமல், வியர்த்தொழுக நடுங்கிப் போனார். அமுதாவிற்கு என்னதான் தமிழ் சொல்கின்றாள், தன் கணவன், கணேஷன் ஏன் ஆட்டங் காண்கின்றார் என்று குளம்பிப் போயிருந்தாள்.
எப்பவும் வாழ்க்கையிலே ஒருவரைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது, அவர்களது, பலம், பலவீனம் இரண்டையும் தெரிந்திருக்க வேண்டும். அதனால், எப்போதாவது தேவையற்ற விதத்தில் நமக்குப் பங்கம் வருகிறதென்றால் இப்படித்தான் அவிழ்த்து விட வேண்டும்.
பம்புத் தண்ணீரின் ஓட்டத்திலே நன்றாக நீராடிப் பார்த்தால் தெரியும், அனுபவம் உள்ளோருக்கு, சிபீ, கேடி போல, உயிர்த்து வரும் பசி இருக்கே இப்படித்தான் இருக்கும் என்பது.
- போட்டி தொடங்கப் போகின்றது, அதுமட்டுமல்லாமல், தமிழின் வாதைகள் இப்போது கண்ணின் முன்னாலே தெரிகின்றது.
- இந்த நிலையினில், ஜனாம்மாவால் ஒன்றும் சொல்ல முடியாது, செய்யவும் இயலாது.
- மீனாவுடன் சேர்ந்து கணேஷன், அமுதா என்று எல்லாரும் ஒன்றாகி நிற்பார்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!