posted 23rd July 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இன்று வரைக்குமான வாரிசு தமிழ் சீரியலிலே, திடீரென ஒரு மாற்றம் இடம் பெற்றது. வர்ஷினி அமைதியானாள். சேது வர்ஷினிக்குத் தாலி கட்டி மனைவியாக்கும் படி பெரியோரால் பணிக்கப்பட்டு அதுவும் நடந்தேறியது. மனக்குமுறலுடன் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்று வெறித்தனத்துடன் தனது தலையினை அடித்துக் கொண்டிருந்தான், பிரபு. அரவிந்துக்கும், தேன்மொழிக்குமான கல்யாணத்தினை இடைநிறுத்தி, பிரபு தேனுவுக்குத் தாலி கட்டினான். அனைவரும் குளம்பினர், தேனுவின் முடிவினால். வெருட்டப்பட்டிருந்தாள் தேனு, பிரபாவினால். வர்ஷி காப்பாற்றப்பட்டாள், தேனு பலிக் கடாவானாள். கணேஷன் வெகு சந்தோஷத்தில். தேனுவின் முடிவிற்குக் காரணம் புரியாமல் ஜனாம்மாவின் குடும்பமோ குளப்பத்தில்.
சகோதர பாசம் தமிழின் திடமான மனத்தினை உருக்குலைக்கத் தொடங்கியது. சிபீயின் வார்த்தைகள் தமிழை மீட்டெடுக்க விளைந்தன. ஆனால், உறைந்து போனவளாய், தனது அத்தை நின்றதையும் மறந்தாள், தன்பாட்டினில் கடந்து சென்றாள் தமிழ்.
Varisu | வாரிசு | 21.07.2026 | அன்பு ஊற்றெடுக்கும் உங்களின் ஒருங்கிணைவினால்
கணேஷனும், அமுதாவும் நினைத்த படி வர்ஷிக்கும், சேதுவுக்கும் கல்யாணம் நடந்தேறியது. சேதுவுடன் நண்பன் மாதிரிப் பழகியவள் இப்போது புது உறவினுள் நுழைந்து விட்டாள் வர்ஷி. அவளின் மனத்தினால் இந்த திடீர் திருப்பத்தினை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பவும் வர்ஷினியால் பிரபுவைப் பற்றி சொல்லப்பட்ட, நிரூபிக்கப்பட்ட உண்மைகளை இன்னமும் வர்ஷி நம்பவில்லை. வர்ஷிக்கு தனது வாழ்க்கைதான் முக்கியம் என்ற மனநிலையினில் இவள்.
வர்ஷிக்கு பிரபுவுடன் கல்யாணம் நடந்திருந்தால், இப்போது தேனு பிரபுவுடன் ஜனாம்மாவின் பக்கமான உண்மைகளைச் சொல்லி தீமையினை ஜனாம்மாவிற்கு எதிராகச் செய்யாதே என்று கேட்டுக் கொண்டிருப்பது போல, வர்ஷி இருக்க மாட்டாள், ஜனாம்மாவிற்கு எதிராகத்தான் போயிருப்பாள் என்றுதான் ஊகிக்கத் தோன்றுகின்றது. இந்த நிலைப்பாடானது இப்போது வர்ஷி இருக்கும் மனநிலையினை வைத்து ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது.
பிரபுவுக்குத் தெரிந்ததோ, தனது தகப்பன் குறிஞ்சியைப்பற்றி தனக்கு அறிவு தெரிந்ததிலிருந்தும், அவனுக்குச் சொல்லப்பட்டதினை வைத்தும்தான். ஆனால், ஜனாம்மா ஏன் இப்படி குறிஞ்சிக்கு எதிராக நிற்கின்றா என்று அவனுக்குத் தெரியாது. அதாவது, குறிஞ்சி தனக்குக் கீழே வேலை பார்க்கும் பெண்களுடன் கேவலமாக நடந்து கொண்டதையும், அதனையே ஜனாம்மாவிடம் எதிர்பார்த்ததால் அவன் மரியாதையீனப்படுத்தப்பட்டதும் பிரபுவுக்கும், அவனது அம்மாவிற்கும் தெரியாது.
தனது தகப்பன் ஜனாம்மாவால் கஷ்டப்படுத்தப்படுகின்றான் என்று மட்டும்தான் தெரியும். குறிஞ்சியின் கேவலமான கதைகளும், அவன் வாழ்க்கையின் நடைமுறைகளும், கணேஷனுடன் சேர்ந்து ஜனாம்மாவிற்கு எதிராகச் செய்த அநியாயங்கள் எதுவுமே பிரபாவிற்குத் தெரியாதே. இப்போது தெரிய வந்தாலும் பிரபா நம்பப் போவது இல்லை.
தேனுவுடனான அரவிந்தின் கல்யாணமானது பிரபுவினால் பறிக்கப்பட்டது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
அரவிந்தின் அண்ணன் விநோத் தனது சுயநலத்தினால் றாமசாமி மேலே அருவருப்பான பழியினைப் போட்டு அவரை சபைகளின் முன்னால் தலை குனிய வைத்து அனுப்பப்பட்டதற்கு கிடைத்த பரிசு என்று கூடச் சொல்லலாம். விநோத்தின் இந்தச் செயலுக்கு இவ்வளவு கெதியாகப் பதில் கிடைக்கும் என்பதானது ஒரு படிப்பினையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.
தனது தகப்பனைக் காப்பாற்றுவதற்காக தனது வாழ்க்கையினைப் பணயம் வைத்தாள் தேனு. இதனை வெளியே சொல்லக் கூடாதென்பது பிரபுவின் கட்டளை. அதனை மீறினால், செல்வரத்தினத்தினைப் பலி கொடுக்க வேண்டி வரும் என்பதுதான் பிரபுவின் டீல்.
சிபீயின் நிலைப்பாடானது பிரபுவின் இந்தச் செய்கையினால் தாங்கள் கஷ்டத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று பிரபு நினைத்து விடக் கூடாதென்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதாகும். ஆனால், அப்படி சிபீயின் குடும்பம் போலியாக நடித்தால், தேனுவை துன்பப்படுத்த மாட்டான் பிரபு என்று என்ன நிட்சயம்?
இதுவோ மிகவும் சிக்கலான முடிச்சு. இரு உயிர்களுடன் சம்பந்தமானது. அவிழ்ப்பதோ மிகவும் கஷ்டம். சட்டத்தினை ஜனாம்மாவின் குடும்பம் அணுகினால், இந்த பந்தத்தில் சிக்கியுள்ள தேனுவே ஜனாம்மாவின் குடும்பத்தினருக்கு எதிராகத்தான் நிற்பாள். அப்போ இந்தக் கேசே நிற்காது.
கணேஷன் மீண்டும் தனது குள்ளத்தனத்தினை தொடங்கி விட்டான். கல்யாணம் சேதுவுடன் நடக்க வேண்டும், தனக்கு அப்போதுதான் ஒரு அங்கீகாரம் ஜனாம்மாவின் வீட்டில் கிடைக்கும் என்ற தூண்டிலைப் போட்டவன் இப்போது ஆரம்பித்து விட்டான், ஜனாம்மாவின் சொத்தினை சட்ட றீதியாக அமத்துவதற்கு. அதற்குத்தான் மீனாவை தமிழின் குடும்பத்திற்கு எதிராகத் திருப்புகின்றான்.
முன்னையது போல சேதுவை நண்பன் போல ஏற்றுக் கொள்ளும் மனநிலையினில் இல்லை வர்ஷி. சேதுவைக் கடித்துக் குதறுகின்றாள் வர்ஷி. வாய் செத்துப்போய் அடங்கிப் போகின்றான் சேது. சேதுவின் மௌனம் வர்ஷினியின் மனத்தினை மாற்றுமா? ஜனாம்மாவினதும், சிபீயினதும், தமிழினதும் ஆட்டம் எப்படித்தான் இருக்கப் போகின்றது?
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!