posted 16th May 2026
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- வார்த்தைகள் பலத்தது – மனஸ்தாபம் உதித்தது
- கவலையுடன் இருந்த காவேரி, அம்மு இன்மையால் மனத்துடிப்புடன் கடந்த கணங்கள்
- அம்முவின் கேள்விக்கு விடை தெரியாத காவேரி
- துன்பத்தின் உச்சம் தீர்ப்பது எப்படி?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 14.05.2026
காவேரி தனக்கு விரும்பியவனை தனது வீட்டிற்கு அவனது குடும்பத்துடன் பெண் கேட்டு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள். இந்த விஷயத்தினை காவேரி தன் வீட்டில் அனைவருக்கும் அறிவித்தாள். இதனால், காவேரிக்கும், அவளது அம்மா சாரதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்துடன் காவேரி பாடசாலைக்கு வேலைக்காகப் போய் விட்டாள்.
பாடசாலைக்குப் போகு முன்பு காவேரி தனது கல்யாண விஷயமாக விஜேயுடன் கதைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தாள். விஜேயுக்கோ அம்முவைக் கண்டு பிடித்து வீட்டிற்கு கூட்டி வந்த பின்பும் அவனுக்கு இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முன்பு காவேரியின் கோளுக்கு வந்து சந்திக்கின்றேன் என்று சந்திக்கச் சென்றான்.
காவேரி வீட்டினிலே ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் மிகவும் கோபத்துடன் விஜேயைச் சந்திக்கையிலே, அவளின் மனநிலை மிகவும் குளப்பமாக இருந்தது. இதனால், விஜயை ஆரம்பத்திலிருந்தே வேறுவிதமாக படம் போட்டு வைத்திருந்த காவேரிக்கு அக்கணம், அவளும் அந்தக் கண்ணோட்டத்தினிலே விஜேயைப் பார்த்தாள்.
எதையும் யோசிக்காமல் காவேரி இறுதியாக, விஜேய் தனது பிள்ளையினை வைத்து தன்னை blackmail பண்ணுவதாக ஒரு கூற்றினை வேதனையுடனும், அதிர்ச்சியுடனும் இருந்து விஜேய் எதிர் பார்க்கவில்லை. கோபமடைந்தான். விஜேயும் ஆத்திரத்தில் காவேரிக்கு, காவேரி எதிர் பார்க்காத வாக்கினை அள்ளி வீசினான். இதைக் கேட்டதும் காவேரி அதிர்ந்து போனாள்.
கல்லூரிக்குச் சென்ற காவேரிக்கு அங்கு அம்மு வராதது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவளால் அம்முவைக் காணாதது, அவளோ எதிர் பார்க்காத அளவிற்கு வேதனையினைக் கொடுத்தது. அவளால் அங்கு ஒழுங்காகப் பாடம் நடத்த முடியவில்லை. அவளால் சாப்பிடக் கூட முடியவில்லை.
பாடசாலை முடியுமட்டும் ஒருவாறாக தன்னை சுதாகரித்தவளாய் தனது வீட்டிற்குப் போகாமல் காவேரி அம்முவின் வீ்ட்டிற்குப் போவதற்காகப் புறப்பட்டாள்.
இதற்கிடையில், சாரதாவும், கங்காவும், நர்மதாவும் விஜேயின் வீ்ட்டிற்கு அம்முவைப் பார்ப்பதற்காக வந்தார்கள். வழமையாக விஜேய்தான் சாரதா அத்தையை மனப்பூர்வமாக வரவேற்பதுண்டு. ஆனால், இன்று காவேரியின் கொல்லும் வார்த்தைகள் அவனை இன்முகம் காட்டி வரவேற்கவுமில்லை. மரியாதைக்காக எழுந்து வரவேற்கவே இல்லை.
விஜேயின் இந்த நடவடிக்கைகளை சாரதாவின் குடும்பம் அவதானிக்கவில்லை. காரணம், அவர்களின் கவனம் முழுக்கவே அம்முவின் மேலேதான் இருந்தது. அம்முவைக் கட்டித் தழுவி களைதீர்த்தனர். உணவு காணும் என்ற அம்மு, சாரதா பாட்டியின் கையால் மீண்டும் சாப்பிட்டாள்.
காவேரியால் இருப்புக் கொள்ளவில்லை. தான் விஜேயுடன் பேசியது தவறு என்றுணர்ந்தாள். ஏன் தான் இப்படியெல்லாம் கற்பனை செய்தேன் என்று காவேரியின் மனச் சாட்சி உறுத்திக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் துடித்துக் கொண்டிருந்தாள் காவேரி.
சாரதாவோ காலை வீட்டில் நடந்தவற்றை ஒன்று விடாமல் விஜேயிடம் ஒப்புவித்தா. விஜேயும் அதற்குப் பதிலாக் தனக்கும், காவேரிக்கும் இடையிலான சம்பாஷினையைப்பற்றி சாரதாவிடமும், கங்காவிடமும் கூறினான். இதில், நர்மதாவை சேர்க்கவில்லை. இதுதான், நம் சமுதாயத்தில் நடப்பது, சிறு பிள்ளைகளை பெரியவர்களின் கதைகளுக்குள் உட்படுத்துவதில்லை.
அம்முவிற்கோ அவளது அப்பா விஜேய் கூறியது ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இதனால்தான் அம்மு தானாகவே சாரதா பாட்டியின் வீட்டிற்குச் சென்றாள்.
இப்படியாக கதைத்த முடிவினில் விஜேய் சாரதாவிடம் இப்படியாக காவேரி தன்னை ஒரு கேவலமானவன் என்று அவளது மனதினில் பதிய வைத்துள்ளதினாலும், தனது தேவைகளுக்காக அம்முவை தான் பாவிப்பதாகக் கூறியதினாலும், இனி தானும், தனது மகள் அம்முவும் உங்கள் வீ்ட்டிற்கு வர மாட்டோம் என்றும், இனி நீங்களும் இனி எங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியதினை சாரதாவும், கங்காவும் ஏற்றுக் கொள்ளவில்லை.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!