posted 9th August 2021
இது ஒரு உயிரின் உதயம்
அகிலத்தில் அவதரித்து ஆதாரமற்று
ஆகாயம் பூமியை ஆக்கியவனை நம்பியவனாய்
பாதியிலும் போகாது பாதிப்புகள் பலதைத்தாண்டி
பள்ளம் பிட்டியெல்லாம்
சமதரையெனக் கால் வைத்து
காலத்தை எண்ணாமல்
எண்ணியதைக் கணக்கெடாமல்
ஆரம்பமே இப்போதென
நினைவிலே நிஜமாக நீச்சலடித்து
நித்தியத்திற்கும் அவன் கதியில் அடைக்கலமாய்
நம்பியதன் ஆசீரைச் சொல்வதெனில்
ஒளிபாலிக்கும் அந்த கோளத்தின் மேலே
வைத்தென்னை அளகுபார்க்கும்
ஆண்டவனைக் கரம்கூப்பி
இதை எழுதித் தொடங்கும்.......
- நான்தான் -