“கிழக்கின் 100 சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழாவில் கௌரவப் பிரதிகள் ஊடகவியலாளர்களுக்கு  வழங்கி கௌரவிப்பு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் “கிழக்கின் 100 சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழா அண்மையில் கல்முனையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில்,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விழாவில் நூலின் சிறப்புப் பிரதிகள் அதிதிகளுக்கு வழங்கப்பட்டதுடன், ஊடகவியாலளர்களுக்கும் கௌரவப் பிரதிகள் வழங்கப்பட்டன.

பணிப்பாளர் நவநீதன், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், செல்லையா பேரின்பராசா, பீ.கேதீஸ் ஆகியோருக்கு நூலின் கௌரவப் பிரதிகளை விழா மேடையில் வழங்கி கௌரவித்தார்.

“கிழக்கின் 100 சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழாவில் கௌரவப் பிரதிகள் ஊடகவியலாளர்களுக்கு  வழங்கி கௌரவிப்பு

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House