
posted 3rd March 2022
இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் (இளைப்பாறிய) மேஜர் ஜெனரல் உமர் பாருக் புர்கியை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ,வியாழக்கிழமை (3), அந் நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் தான் எழுதிய இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றிய ஆய்வு நூலையும் உயர்ஸ்தானிகருக்கு அவர் பரிசளித்தார்.
இச்சந்திப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸெய்யித் அலிஸாஹிர் மௌலானாவும் கலந்துகொண்டார்.
இச் சந்திப்பின்போது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடுகள் நாட்டு நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிய வருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House