
posted 29th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வேலும்மயிலும் அறக்கட்டளையின் உதவிகள்
பிரபல சட்ட அறிஞரும் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தலைவருமான அமரர் மயில்வாகனம் வேலும்மயிலும் அவர்களின் 100 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வேலும்மயிலும் அறக்கட்டளை பருத்தித்துறை அலுவலகத்தில் நேற்று (28) வியாழக்கிழமை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
வேலும்மயிலும் அறக்கட்ளையின் ஸ்தாபக தலைவர் வேலும்மயிலும் தயானந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ம. முரளி பங்கேற்றிருந்தார்.
அமரர் மயில்வாகனம் வேலும்மயிலும் அவர்களது 100 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு ரூ.5000 பெறுமதியான உலருணவு பொருட்கள் அடங்கிய பொதியும், தென்னை மரகன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)