
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெடிமருந்துடன் இளைஞர் கைது
வெடிமருந்துகளை யாழ்ப்பாணம் நகரத்துக்கு கொண்டுவந்தபோது இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அரியாலை காளிகோயில் வீதியை சேர்ந்த 32 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இளைஞரிடம் இருந்து ஒரு கிலோ ரி. என். ரி. வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் எழுதுமட்டுவாழிலிருந்து வெடிமருந்துடன் தனியார் பேருந்து நிலையத்தில் பயணித்த நிலையில் இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இதனால், வெடிபொருட்களை கையாளும் அனுபவத்தை கொண்டிருந்தார். கண்ணிவெடிகளிலிருந்து மருந்தை சேகரித்து யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார். மீனவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கிலேயே அவர் இந்த வெடிமருந்தை எடுத்து வந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவர் இதே குற்றத்துக்காக முன்னரும் கைதாகி விடுதலை செய்யப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)