
posted 14th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வீரமுனைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல்
1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீரமுனைப் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய முன்றலில் மிகவும் உணர்வுபூர்வமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை (12) மாலை இடம்பெற்றது.
சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பூ. பரமதயாளன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ. புஸ்பராஜா, காரைதீவு முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மிலேச்சத்தனமான படுகொலை 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வீரமுனை ஆலயத்தினுள் வைத்து இடம்பெற்றது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)