
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விழிப்புணர்வு நடைபவனி
"சுதந்திரமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்றை பேருவளையைச் சேர்ந்த எம். எஸ். எம். சஹ்மி கடந்த 13ஆம் திகதி பேருவளை நகரில் இருந்து தனது நடைபவனியை ஆரம்பித்தார்.
கடந்த 12 நாட்களாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகல, சியம்பலாண்டுவ ஊடக பொத்துவிலை நோக்கி வருகை தந்த சஹ்மியை வியாழக்கிழமை காலை பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வைத்து அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினர் வரவேற்றனர்.
பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று வழியாக மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் வந்து மன்னார் வழியாக அநுராதபுரம், புத்தளம் ஊடாக கொழும்பு, பேருவளை செல்லவுள்ளதாக சுதந்திர நாடு வேண்டி நடைபவனியில் ஈடுபட்டுள்ள சஹ்மி தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)