
posted 13th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
விபத்து மரணம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு உணவு எடுத்துச் சென்றபோதே குறித்த நபர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றபோது படி ரக வாகனம் மோதியதிலே அவர் மரணமடைந்தார் என பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர் வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது-55) எனும் தங்க நகை ஒட்டும் வியாபாரியாவார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)