யாழ் மாநகர சபை ஆணையாளருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மாநகர சபை ஆணையாளருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டனர்.

யாழ் மாநகர சபை ஆணையாளருக்கு கொரோனா தொற்று

எஸ் தில்லைநாதன்