
posted 6th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். பொலிஸ் பிராந்தியத்துக்கு புதிய அத்தியட்சர்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகராக சூரிய பண்டார நேற்று (05) வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதுவரை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஜகத் விசாந்த பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று சென்றமையால் அவரின் பதவிக்கு சூரிய பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)