
posted 13th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழில் மூதாட்டி சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த நடேசபிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூதாட்டி சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் (11) ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார் மூதாட்டியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)