
posted 25th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மாடு மேய்க்க சென்றவர் யானை தாக்கி மரணம்
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5ஆம் கட்டை கடவான காட்டுப் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (24) அதிகாலை பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இந்த நபர் மாடுகளை மேய்ப்பதற்காக குறித்த காட்டுப் பகுதிக்குள் சென்றிருந்த வேலை யானை தாக்கி உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கே. ஜி. நிலந்த இந்துனில் (வயது- 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாகவும், இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)