
posted 3rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மருத்துவர் அர்ச்சுனா கைது
மன்னார் வைத்தியசாலை மருத்துவர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் மருத்துவர் இ.அர்ச்சுனா இன்று (03) சனிக்கிழமை மதியம் கைது செய்யப்பட்டார்.
நேற்று (02) வெள்ளிக்கிழமை இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தினார் என மன்னார் வைத்தியசாலை நிர்வாகம், மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இன்று (03) காலை மருத்துவர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அவரை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)