
posted 30th November 2021
இயலாமைக்குள் இயலுமையைக் கொண்டவர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் ஒரு நூலாக 'மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்' என்ற சமூக வாழ்வியல் கட்டுரைகள் கொண்ட நூல் வெளியீட்டு விழா மன்னாரில் இடம்பெற இருக்கின்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளரான பி.மாணிக்கவாசகம் என்பவரால் ஆக்கம் செய்யப்பட்ட இந் நூல் வெளியிட்டு விழா எதிர்வரும் 03.12.2021 வெள்ளிக்கிழமை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெறுகின்றது.
மன்னார் மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் (WeCan) நிறைவேற்றுப் பணிப்பாளர் வெற்றிச்செல்வி சந்திரகலா தலைமையில் நடைபெறும் இவ் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி அ.சகிலா பானு கலந்து கொள்ளுகின்றார்.
அத்துடன் நூல் வெளியீட்டு உரையை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டெ.க.அரவிந்தறாஜ் அவர்களும்
நூல் மதிப்புரையை நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் மேற்கொள்ள இருக்கும் இவ் விழாவினை கவிஞர் மன்னார் பெனில் தொகுத்து நடாத்துகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House