
posted 15th July 2022
கடந்த ஒன்றரை மாதத்துக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் சமையல் எரிவாயு, நேற்று விநியோகிக்கப்பட்டது.
மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் கல்லடி போன்ற பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 4,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு, ஒரு குடும்ப அட்டைக்கு ஒன்று வீதம் பிரித்து வழங்கப்பட்டன.
காத்தான்குடி, ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் வைத்து காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதய ஸ்ரீதர் முன்னிலையில் சமையல் எரிவாயுகள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன. இதன்போது பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY