
posted 1st February 2022
தடைசெய்யப்பட்ட சுருக்குவலைகளை கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களையும், தடையப் பொருட்களையும் கடற்படையினர் கைதுசெய்து நீரியல்வள அதிகாரிகளிடம் ஒப்டைப்பதற்காக கடற்படை முகாமுக்குள் வைத்திருந்தபோது அத்துமீறி முகாமுக்குள் நுழைந்த கோஷ்டினர் பொருட்களையும் சந்தேக நபர்களையும் மீட்டெடுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் திங்கள் கிழமை (31.01.2022) மாலை 3 மணியளவில் மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;
சம்பவம் அன்று மன்னார் தாழ்வுபாடு பகுதியில் தென் கடல் பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 7 படகுகளையும், அதில் இருந்த 30 மீனவர்களையும், அவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களையும் கடலில் வைத்து கைப்பற்றிய கடற்படையினர், இவர்களையும் கைப்பற்றிய பொருட்களையும் மன்னார் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக கடற்கரையை அண்டிய கடற்படை முகாமில் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் இருநூறுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என பலர் இம் முகாமுக்குள் புகுந்து சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் அத்துமீறி மீட்டெடுத்து சென்றமையால் தங்கள் அரச பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கடற்படையினர் மன்னார் பொலிசில் முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நடைபெற்றபொழுது மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்கள அதிகாரிகளும் அவ்விடத்தில் பிரசனமாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனையில் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House