மக்களுக்கு விமானப்படையினர் உலர் உணவு பொதி வழங்கினர்

விமானப் படையினரின் நிதிப் பங்களிப்பில் மக்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினரின் 11ம் ஆண்டு நிகழ்வு நிறைவு தினத்தை முன்னிட்டு விமானப்படையினரின் ஒய்வுநிலை அதிகாரிகளின் நிதிப் பங்களிப்பில் இன்றைய 03.08.2022 தினம் குறித்த உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.

இராமநாதபுரம், அழகாபுரி கிராமத்தில் உள்ள 200க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதியினை இரணைமடு விமானப்படையின் பொறுப்பதிகாரி D.M.R. தசாநாக்க வழங்கிவைத்தார்.

குறித்த நிகழ்வு, இராமநாதபுரம் அழகாபுரி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், விமானப்படையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மக்களுக்கு விமானப்படையினர் உலர் உணவு பொதி வழங்கினர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY