
posted 12th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பின் போது 17பேர் கைது
நெல்லியடி பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பின் போது17பேர் கைது செய்யப்பட்டனர்
இன்று 12 ஆம்திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட துன்னாலை பிரதேசத்தில் இராணுவம் மற்றும் மோப்ப நாய்களின்உதவியுடனும் அரச புலனாய்வாளர்களின் தகவலுக்கமைய நெல்லியடி பொலிசாரினால் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது
நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட திறந்த பிடியாணைகள் (Open warrant), பிடியாணைகள் (warrant), சட்டவிரோத மதுபானமான கசிப்பு விற்பனையாளர்கள், மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்னர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிசாரின் விசாரணைக்குப் பின் பருத்திதுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)