புளொட்டை இணைத்தது பெரும் தவறு. நடேசன் ஞாபகர்த்த நிகழ்வில் இரா. துரைரெத்தினம்

“சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி டி. சிவராமை படுகொலை செய்த புளொட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டமை, கூட்டமைப்பின் தலைமைகள் செய்த மிகப்பெரும் தவறாகும்”

இவ்வாறு, இலங்கை தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பவற்றின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. துரைரெத்தினம் விசனமும், கவலையும் தெரிவித்தார்.

மட்டக்களப்பின் மறைந்த ஊடகவியலாளர் (2004 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட) ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகர்த்த நிகழ்வும் “ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீடும், மட்டக்களப்பு பொது நூலககேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிறு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மறைந்த ஊடகர் ஜி. நடேசன் பற்றிய சிறப்பு நினைவுப்பகிர்வு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றியத் தலைவர் இ. தேவஅதிரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் சுவிஸ் சிவராம் ஞாபகர்த்த மன்றமும், கிழக்கு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட்டுள்ள “ஊடகர் ஜி.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத்தொகுப்பு நூலை, கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் வெளியிட்டு வைத்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம், தமது நினைவுப்பகிர்வு உரையின் போது மேலும் பின்வருமாறு கூறினார்.

“இராணுவத்துடன் சேர்ந்து 2009 வரையும அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க உழைத்த ஊடகவியலாளர் சிவராமை படுகொலை செய்த புளொட் இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் செய்த மிகப் பெரும் தவறாகும்”

“ஊடகவியலாளர்களுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதை காண்கின்றேன். இன்றைய நிலையில் ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் மட்டக்களப்பில் முதலாவதாக புளொட் இயக்கத்தால் நித்தியானந்தன் என்ற ஊடகவியலாளர் கழுத்து வெட்டப்பட்டு இறக்கும் நிலைக்கு சென்று உயிர்தப்பினார்.

அதன் பின்னர் அதே புளொட் இயக்கம் தான் ஊடகவியலாள் சிவராமை கடத்தி படுகொலை செய்வதற்கு இராணுவ புலனாய்வு பிரிவுக்கு துணைபோனதுடன் கைது செய்யப்பட்ட தடையங்கள் அழிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் புளொட்டை இணைத்தது உண்மையிலே மிகவும் வேதனையான விடயம். இது ஒரு அரசியில் பார்வையில் கேவலமானது என நான் பார்க்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க ஊடகவியலாளர் சிவராம் வெகுவாக உழைத்தார், அவரையே சுட்டுக் கென்ற புளொட் இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து புனிதர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.

இதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது யாராக இருந்தாலும் தவறு தவறுதான். இது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் செய்த மிகப் பெரிய தவறு. இது தொடர்பாக வெளிப்படையாக கட்டுரை எழுதினேன்.

இது மன்னிக்க முடியாத குற்றம். 2009 வரைக்கும் இராணுவத்துடன் சேர்ந்து படுகொலை புரிந்த ஓர் அமைப்பை அதே தமிழ் மக்களின் அரசியல் தலைமையுடன் இணைத்துக் கொள்வது அதைபோன்ற கேவலமான வேலை இருக்க முடியாது.

இது தொடர்பாக தமிழ் மக்கள் ஊடகவியலாளர்கள் ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்பது கேள்வியாக இருக்கின்றது. அதேபோன்று லசந்த விக்கிரம சிங்க உட்பட பல சிங்கள ஊடகவியலாளர்கள் படுகொலை செய்த இந்த ஆட்சியாளர்களை 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்துள்ளது என வீரவாக்கியம் பேசியவரை எந்த மக்கள் வாக்களித்தார்களோ அந்த மக்களால் வீட்டுக்கு போ என்று சொல்லுகின்றளவுக்கு வந்திருக்கின்றது.

அதேபோன்று ஊடகவியலாளர் நடேசனை மற்றும் தம்பையா உட்பட பலபேரை படுகொலை செய்தவர்களை 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மட்டக்களப்பு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே 69 இலட்சம் சிங்கள மக்கள் எடுத்த முடிவை எப்போது மட்டக்களப்பு மக்கள் எடுப்பார்கள்?

“கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இலங்கை வரலாற்றிலே 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சங்கம் அக்கரைப்பற்று தொடக்கம் திருகோணமலை வரையிலான ஊடகவியலாளர்களை உள்ளடக்கி செயற்பட்ட சங்கமாகும்.

நடேசனுக்கு முற்பட்டகாலம், அதற்கு பிற்பட்டகாலம், நடேசனின் முற்பட்டகாலம் அச்சுறுத்தல் இருந்தாலும் அது ஒரு பொற்காலம். இருந்தபோதும் பல்வேறு கட்சிகளை இணைத்து ஒரு பலமான ஒரு அரசியல் தலமை உருவாக்க வேண்டும் என்பதற்காக கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அந்த செயற்பாட்டிலே வெற்றியும் கண்டது.

அவ்வாறு ஒரு பலமான அமைப்பாக மட்டக்களப்பு மண்ணில் இருந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக அப்போது கருணா பிளவுபட்டநேரம் ஊடக சங்கங்கள் பிளவுபட்டுள்ளது.

எனவே இனிமேலாவது அனைத்து ஊடக சங்கங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.” என்றார்.

புளொட்டை இணைத்தது பெரும் தவறு. நடேசன் ஞாபகர்த்த நிகழ்வில் இரா. துரைரெத்தினம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY