
posted 12th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிரதான வேட்பாளர்களுடன் பேசுவதற்கு தமிழரசு முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, நேற்று (11) ஞாயிறு நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் குறித்து பிரதான வேட்பாளர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானம் எட்டப்படும் என தமிழரசுக் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கட்சியின் அனுமதியின்றி, தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் பொது வேட்பாளராகக் களமிறங்குவதற்கு சம்மதித்தமைக்கு எதிராக, பா. அரியநேத்திரனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொது வேட்பாளர் விடயத்தை ஆதரிப்பதா? இல்லையா? என்பது குறித்தும் நேற்று எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)