
posted 9th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிரதமர் பதவியை ஏற்க எனக்கே அழைப்பு வந்தது - விஜயதாஸ ராஜபக்ஷ சொல்கிறார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு பிரதமர் பதவியை வழங்க முன்வந்தார். பெரமுன கட்சியினராலேயே ரணிலுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது என்று முன்னாள் நீதி அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் அறகலய போராட்டம் நடந்தபோது நாட்டை அமைதிப்படுத்தி, அதனைக் கட்டியெழுப்புவதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 மே மாதம் 12 திகதி ஒரு தீர்மானத்தை எடுத்து அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.
என்றாலும், அதனை அறிந்த பொதுஜன பெரமுன கட்சியினர் குழப்பமடைந்து ரணில் விக்கிரமசிங்கவை அவசரமாக அழைத்து வந்து ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததால் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. நான் பிரதமராகும் வாய்ப்பை பொதுஜன பெரமுனவே இல்லாமல் செய்தது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)