பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நடந்த ஆகோரமான ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பங்குகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தினரின் பலத்த எதிர்ப்பையும் கடந்து தடைகளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

இன்று புதன்கிழமை காலை முதல் தீவிரம் பெற்றிருந்த போராட்டத்தின் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் உட்பட்ட தாக்குதல்களில் சிக்கி 30 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இருந்தபோதிலும் போராட்டத்தினைக் கைவிடாத போராட்டக் காரர்கள் தடைகளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நடந்த ஆகோரமான ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY