
posted 8th August 2022
மலையகப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவிற்க்கு உரித்தான நல்லதண்ணி பிரதான வீதியில் சுமார் 200 மீட்டர் தேயிலை செடிகளில் உள்ள பாரிய மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-சரிந்து விழும் அபாயத்திலுள்ள மண் திட்டுப் பகுதியில் பாரிய வெட்டுக்கள் ஏற்பட்டு உள்ளதால் அந்த வீதியை உடன் அமுலாகும் வரையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இவ் பாதையை மூடுவதற்கான நடவடிக்கையை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களின் பணிபுரையில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன் அவர்களினால் ஞாயிற்றுக் கிழமை (07.08.2022) மதியம் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இணைந்து இவ் வீதியை மூடியுள்ளனர் .
மேலும் அப் பகுதியில் உள்ள அனைத்து இளைஞர்கள் ஒன்றினைந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் அவ்வப்போது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திங்கள் கிழமை (08.08.2022) காலை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்கள் மற்றும் நில ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் வந்து நிலத்தை ஆய்வு செய்ய உள்ளதாக ரஞ்சித் அலககோன் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY