Placeholder image

அநுராதபுரம், புத்தளம் பிரதான வீதியில் மகாபுலங்குளம் பிரதேசத்தில் கடற்படைக்குச் சொந்தமான பஸ் மற்றும் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை காலை 5.00 மணியளவில் இந்த வாகனங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் வானின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனா். மேலும் வானில் பயணித்த ஆறு போ் மற்றும் கடற்படைச் சிப்பாய்கள் எட்டு போ் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என எலயாபத்துவ பொலிஸாா் தெரிவித்தனா்.

புனாவ கடற்படை முகாமிலிருந்து புத்தளம் கடற்படை முகாமுக்கு அதிகாரிகள் சிலரை அழைத்துச் சென்றுக்கொண்டிருந்த பஸ் மற்றும் நொச்சியாகமவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான் என்பனவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் காயங்களுக்குள்ளானவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

குறித்த வான் திருமண நிகழ்வொன்றுக்கு அநுராபுரம் சென்றதாக பொலிஸாா் தெரிவித்தனா்.

பஸ் -  வான் மோதியதில் இருவர் பலி

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More
Varisu - வாரிசு - 05.09.2025

Varisu - வாரிசு - 05.09.2025

Read More
Varisu - வாரிசு - 04.09.2025

Varisu - வாரிசு - 04.09.2025

Read More