
posted 16th May 2022
பளை பிரதேசத்தில் 15.05.2022அன்று முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பளை இளைஞர் அணியினரால் வழங்கப்பட்டது.
பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் நேற்று (15) காலை 10.30 மணியளவில் பளை இளைஞர் அணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி காய்ச்சி உண்டமையும், கஞ்சிக்காக வரிசையில் நின்ற போது இராணுவத்தின் குண்டு வீச்சில் பலியானதற்குமாக நினைவு கூறும் முகமாக குறித்த உப்பு கஞ்சி பளை இளைஞர் அணியால் வழங்கப்பட்டது. எமது மக்களின் வலிகளை வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY