
posted 3rd March 2022
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்று இன்று பல்கலைக்கழக ஒலுவில்வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.
நிருவாக உத்தியோகத்தர்களுக்கான திறன்மேம்பாட்டுத்திட்டம் எனும் தலைப்பிலான இப்பயிற்சிப் பட்டறை அதன் பணிப்பாளர் பேராசிரியர் ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள நிருவாக உத்தியோகத்தர்களின் திறன்களை மேலும் வளப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப்பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பயிற்சிப்பட்டயின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களும் கௌரவ அதிதியாக பதிவாளர் எச். அப்துல் சத்தார் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இப்பயிற்சிப் பட்டறையின் வளவாளராக ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பதிவாளர் கலாநிதி ஏ.எல். ஜௌபர் சாதீக் கலந்து கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House