
posted 1st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
படைகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு இறப்பு சான்றிதழ் என்றால் கொன்றது யார்?
“இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ்தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?” இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முல்லைத்தீவில் நேற்று (31) புதன்கிழமை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பங்கேற்றவர்கள், “கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே”, “இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?”, “காணாமல் போனோர் அலுவலகம் ஒரு கண்துடைப்பு நாடகம்”, “சர்வதேச விசாரணையே தேவை, இழப்பீடுகள் வேண்டாம், எமக்கு பிள்ளைகள் வேண்டும்”, என்று கோஷமிட்டனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)