
posted 11th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாகபட்டினத்திலிருந்து பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்
தமிழ்நாடு - நாகபட்டினத்திலிருந்து பயணிகள் கப்பல் நேற்று (10) சனிக்கிழமை பரீட்சார்த்த பயணமாக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வந்தது.
நேற்று நண்பகல் 12 மணியளவில் சிவகங்கை என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் காங்கேன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
நாகபட்டினம் - காங்கேன்துறை இடையிலான பயணிகள் கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடவுள்ளது.
முன்னதாக, கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி இந்தக் கப்பல் சேவை ஆரம்பமான போதிலும் பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)