
posted 7th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தூக்கத்தில் சாரதி விபத்துக்குள்ளான வாகனம்
நித்திரை மயக்கத்தில் வாகனம் செலுத்தி வந்தமையால் விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. இதனால் சாரதி காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை இரண்டு மணியளவில் மன்னார் தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது..
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;
இவ் விபத்தானது மன்னார் சிலாவத்துறை வேப்பங்குளம் பகுதியில் இருந்து மன்னார் நோக்கி இறால் ஏற்றி வந்த கெப் ரக வாகனத்தில் சாரதி நித்திரை மயக்கத்தில் வாகனத்தை செலுத்தி வந்த வேளையில் பாலத்தின் வீதியோர கற்களில் மோதி வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டது.
வாகனத்தின் சாரதி காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)