
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தாளையடி றோ.க.த.க பாடசாலையில் பொலித்தீன் பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க பாடசாலையில் மாணவர்களால் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் பொலித்தீன் பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி இன்று 08.08.2024 நடாத்தப்பட்டுள்ளது.
பேரணியை தொடர்ந்து பாடசாலை பிரதான வீதியின் இரு மருங்கிலும் உள்ள பொலித்தீன் மற்றும் உக்காத கழிவு பொருட்கள் மாணவர்களால் அகற்றப்பட்டது
பேரணியில் வடமராட்சி கிழக்கு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நிரூபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)