
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பொது வேட்பாளர் வரும் வாரம் இறுதியாகும் - சுரேஷ் பிறேமச்சந்திரன்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யப்படுவார் என்று தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ. பி. ஆர். எல். எவ்.) தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தமிழ் சிவில் அமைப்புகளும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பை நிறுவியிருந்தன. அத்துடன், பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கும் உபகுழு ஒன்றை அமைக்கப்பட்டது. இந்த உபகுழுவிலும் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிறேசமந்திரனிடம் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)