
posted 27th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பொது வேட்பாளரை தமிழ் அரசு கட்சி நிறுத்தாது - சுமந்திரன் எம். பி.
“ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது”, என சுமந்திரன் எம். பி. கூறியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சமூகத்தை மாத்திரம் மையப்படுத்தி வேட்பாளர் நிறுத்தப்படக்கூடாது. இதன் அடிப்படையில், தமிழ் பொது வேட்பாளர் கருத்தியலை ஆதரிக்கவில்லை.
பொது வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுகளை நடத்துவோம் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)